800 ரூபாய் கொடுத்து காதலனை அடிக்கச்சொன்ன காதலி

73பார்த்தது
800 ரூபாய் கொடுத்து காதலனை அடிக்கச்சொன்ன காதலி
புதுக்கோட்டை: எஸ் குளவாய்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் (27) என்ற இளைஞரும், அய்யனார்புரத்தை சேர்ந்த சந்தியா (23) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து நடந்த தகராறில் சந்தியாவை வேண்டாம் என்று கார்த்திக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தியா, தனது உறவினரான சிவ ஸ்ரீ பத்ம கணபதி (24) என்பவரிடம் ரூ.500, 300 என இரண்டு தவணைகளில் ரூ.800 அனுப்பி கார்த்திகை ஆள் வைத்து அடிக்க சொல்லியுள்ளார். சந்தியா சொன்னபடி செய்த சிவ ஸ்ரீ பத்ம கணபதி மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி