குடும்ப தகராறு; டீக்கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து

551பார்த்தது
குடும்ப தகராறு; டீக்கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து
தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனையை சேர்ந்தவர் சங்கர பாண்டியன் (53). இவர் பசுவந்தனை போலீஸ் குடியிருப்பிற்கு எதிரே டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருபவர் ராஜா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுந்தரவடிவேல் என்பவருக்கும் குடும்ப தகராறு இருந்துள்ளது.  

இந்நிலையில், சம்பவத்தன்று சுந்தரவடிவேல், சங்கரபாண்டியன் டீக்கடைக்கு வந்து, டீ மாஸ்டர் ராஜாவிடம் தகராறு செய்துள்ளார். இதில், கைகலப்பு ஏற்படவே சுந்தரவடிவேல் தான் வைத்திருந்த கத்தியாமல் ராஜாவை வெட்ட முயன்றுள்ளார். இதனை தடுக்கச் சென்ற கடை உரிமையாளர் சங்க ரபாண்டியனை, சுந்தரவடிவேல் தான் வைத்திருந்த கத்தியால் தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த சங்கரபாண்டியன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார்.  


உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.   இந்நிலையில், சங்கரபாண்டியனை கத்தியால் சுந்தரவடிவேல் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்காமல், பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டு கத்தியால் தாக்கப்பட்ட சங்கரபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி