குவைத்தில் தீ விபத்து; வானர முட்டி ஊழியர் உயிரிழப்பு!

563பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி என்பவர் மகன் மாரியப்பன் (41). இவர் குவைத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 20 வருடமாக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த மாரியப்பனுக்கு, , அவரது தாய் வீரம்மாள், கற்பகலட்சுமி என்ற மனைவியும், , நிர்மலா என்ற மகளும், , கதிர்நிலவன் என்ற மகனும் உள்ளனர்.


மாரியப்பன் இறந்த தகவல் கேட்டு அவர்கள் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் சோகத்தில் உள்ளனர்
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 15 நாள் விடுமுறையில் வானரமூட்டி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வந்துவிட்டு மாரியப்பன் சென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி