குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளி உடல் எரியூட்டப்பட்டது

84பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி என்பவர் மகன் மாரியப்பன் (41). இவர் குவைத்தில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தில் கடந்த 20 வருடமாக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த மாரியப்பனுக்கு, , அவரது தாய் வீரம்மாள், கற்பக லட்சுமி என்ற மனைவியும், , நிர்மலா என்ற மகளும், , கதிர்நிலவன் என்ற மகனும் உள்ளனர்.
மாரியப்பன் இறந்த தகவல் கேட்டு அவர்கள் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் சோகத்தில் உள்ளனர்
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வானரமூட்டி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வந்துவிட்டு மாரியப்பன் சென்றது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் அவரது உடல் இன்று விமான மூலமாக கொச்சி கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கிருந்து தரை மார்க்கமாக அவரது சொந்த ஊரான வானரமுட்டிக்கு கொண்டுவரப்பட்டது பின்னர் அவரது
உடலைக் காண அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி அந்த கிராமமே காத்திருந்து மரியாதை செலுத்தினர். இறுதி மரியாதை செலுத்தி உடலை எரியூட்டப்பட்டது.

அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் கோட்டாட்சியர் ஜோன் கிறிஸ்டிபாய் கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர்
இறுதி மரியாதை செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி