ரஷ்யாவில் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான 12ஆவது சர்வதேச கூட்டம் நடந்தது. இதில், ரஷ்ய அதிபர் புதின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்த 21ஆம் நூற்றாண்டின் மிகவும் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் இருக்கிறது. இதனை தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இறையாண்மை கொண்ட நாடுகளை சீர்குலைத்து, இனம், மதங்களுக்கு இடையே வெறுப்பைத் தூண்டுவதே இந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் நோக்கமாக உள்ளது” என்றார்.