மத்திய அமைச்சர் இப்படி அப்பட்டமாக பொய் பேசலாமா?

75பார்த்தது
மத்திய அமைச்சர் இப்படி அப்பட்டமாக பொய் பேசலாமா?
மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் போன்ற அரசியல்வாதி பொய் பேசுவது எனக்கு ஏமாற்றத்தை தருகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பொதுமக்களின் சொத்துகளை பறித்து, ஊடுருவல் காரர்களுக்கு கொடுப்பதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ளது” என சொல்கிறார். தேர்தல் அறிக்கையில் அப்படி எங்கே சொல்லி இருக்கிறோம்?. மத்திய அமைச்சர் அப்பட்டமான பொய்களை பேசி தனது கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி