கோடை வெயிலால் எலுமிச்சை பழம் விலை உயர்வு

564பார்த்தது
கோடை வெயிலால் எலுமிச்சை பழம் விலை உயர்வு
சேலம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று முன்தினம் 108.2 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். அதே நேரத்தில் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரக்கூடிய எலுமிச்சை பழத்தின் தேவைப்பாடு கோடை காலத்தில் அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் தான் எலுமிச்சை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இதனால் சேலம் மார்க்கெட்டிற்கு ஆந்திராவில் இருந்து எலுமிச்சை பழம் தினமும் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக எலுமிச்சை பழத்தின் விலை படிப்படியாக அதிகரித்து உள்ளது. சேலத்தில் உள்ள உழவர் சந்தைகளிலும், வெளி மார்க்கெட்டிலும் கடந்த மாதம் ஒரு எலுமிச்சை பழம் ரூ.5 முதல் 7 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு எலுமிச்சை பழம் ரூ.7 முதல் ரூ.10 வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விற்பனையில் எடுத்துக்கொண்டால் தரத்தை பொறுத்து ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.150 முதல் ரூ.170 வரைக்கும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி