தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரத்ததான முகாம்

82பார்த்தது
நாட்டின் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாச்சிகுளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டம் நாச்சிகுளம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது இந்த ரத்ததான முகாமில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு ரத்தக் குருதியை பெற்றுச் சென்றனர்.

இந்த நிகழ்வு நாச்சிகுளம் கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் மாவட்ட பொருளாளர் ஹாஜா மைதீன் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

ரத்த அவசியம் குறித்து மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் அப்துல் ரகுமான் உரையாற்றினார் இந்த ரத்ததான முகாமில் அப்பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமிய பொதுமக்கள் மற்றும் மாற்று சமூகத்தினர் கலந்து கொண்டு 40 நபர்கள் ரத்த குருதி வழங்கி சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் ரத்த வங்கி மருத்துவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி