விவசாயிகளுக்கு 2 கிலோ விதை நெல் வழங்கிய சிவகார்த்திகேயன்

74பார்த்தது
உலகப் புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழாவில் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இரண்டு கிலோ விதைநெல் வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாதுகாப்பு பண்ணையின் சார்பில் 19ஆம் ஆண்டு தேசிய நெல் திருவிழா ஜூன் 22ஆம் தேதி இன்று விமர்சையாக துவங்கியது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பல்வேறு இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தேசிய நெல் திருவிழா காலை முதல் துவங்கியது. இதில் கலந்துகொள்ளும் விவசாயிகளுக்கு இரண்டு கிலோ விதை நெல் கொடுத்து அடுத்த ஆண்டு அறுவடை செய்து நான்கு கிலோ விதைகள் பெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்தாண்டு விவசாயிகளுக்கான இரண்டு கிலோ நெல்லை திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் சரவணன் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி