மூன்று மாத காலமாக குடிநீர் வழங்காததை கண்டித்து கட்டிமேடு பகுதியில் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சி அமைந்துள்ளது.
இங்கு தெற்கு தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கடந்த மூன்று மாத காலமாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் குடிநீர் கேட்டு பல்வேறு முறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் தண்ணீர் வழங்காததை கண்டித்து நேற்று கட்டிமேடு பகுதியில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியலால் வேதாரண்யம் திருத்துறைப்பூண்டி சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.