மன்னார்குடி அர்பன் பேங்க் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஏ பி அசோகன் தொடங்கி வைத்தார். மன்னார்குடி நகரின் பல்வேறு வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மாணவர் மாணவியர் அரசு பள்ளியில் மாணவர் மாணவியரை பெற்றோர்கள் சேர்க்க வேண்டும், அரசின் உதவிகளை பெற்று பயனடைய வேண்டுமென கோஷங்களை எழுப்பிய படி சென்றனர். நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், மாணவ மாணவியர் பங்கேற்றனர்.