குண்டு சுடும் பயிற்சியைஆய்வு செய்த மாவட்டகாவல்கண்காணிப்பாளர்

68பார்த்தது
குண்டு சுடும் பயிற்சியைஆய்வு செய்த மாவட்டகாவல்கண்காணிப்பாளர்
தமிழக காவல்துறையில் பணிபுரியும் அனைத்து காவல் ஆளினர்களுக்கும் வருடந்தோறும் குண்டு சுடும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கான குண்டு சுடும் பயிற்சி கடந்த 5 நாட்களாக புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சி துப்பாக்கி சுடுதளத்தில் நடைப்பெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற வருடாந்திர குண்டு சுடும் பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், M. Sc, (Agri). , அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்தி