திருவாரூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

84பார்த்தது
திருவாரூரில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும். முதலமைச்சரை பதவி விலகக் கோரி அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து. தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் புதிய ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக கழக அமைப்பு செயலாளர்கள் சிவா ராஜமாணிக்கம், கோபால் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட மரணத்திற்கு திமுக பொறுப்பேற்று உடனடியாக. முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நகர செயலாளர் ஆர். டி. மூர்த்தி, திருவாரூர் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் கலியபெருமாள், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன் வாசுகி ராம், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி