டிராக்டரில் விளையாடிய சிறுமி தவறி விழுந்து உயிரிழப்பு

63பார்த்தது
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், அதம்பார் மேலவெளி பகுதியை சேர்ந்த தியாகராஜன் சரிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். தியாகராஜன் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். தியாகராஜன் சரிதா தம்பதிகளுக்கு ஒன்பது வயதுடைய மகஸ்ரீ மற்றும் 7 வயதுடைய சுபஸ்ரீ ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
மக ஸ்ரீ அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நான்காம் வகுப்பும், சுபஸ்ரீ மூன்றாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சுபஸ்ரீ வீட்டின் அருகே அப்பகுதியில் உள்ள சிறுவர் சிறுமிகளோடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரின் டிப்பரில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது டிராக்டரின் டிப்பரிலிருந்து சுபஸ்ரீ கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடன் அக்கம் பக்கத்தினர் சுபஸ்ரீ-யை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே சுபஸ்ரீ இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து நன்னிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சுபஸ்ரீ உடலை பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி