மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை video

62பார்த்தது
மன்னார்குடி அருகே செருமங்கலம் பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக வடுவூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி போலீசார் அப்பகுதிக்கு சென்று மேற்கொண்ட விசாரணையில் இறந்த வாலிபர் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மேலபுள்ளான்விடுதியை சேர்ந்த கணேசன் (வயது 23) என்பது தெரிய வந்தது.
இவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை நான்காண்டுகளாக காதலித்தால் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இவர் காதலித்து வந்த பெண்ணுக்கு வேறொரு இடத்தில் திருமணம் செய்வதற்கு ஏற்பாடு நடைபெற்ற வந்துள்ளது.
இந்நிலையில் மன்னார்குடியில் உள்ள தனது சகோதரியை பார்ப்பதற்காக மேலப்புள்ளான் விடுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு கணேசன் வந்துள்ளார்.
வரும் வழியில் டாஸ்மாக் கடையில் மது வாங்கிய அவர் செருமங்கலம் சுடுகாடு அருகே அமர்ந்து மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்துள்ளார். விஷம் குடிப்பதை செல்போனில் பதிவு செய்த கணேசன் அதனை தனது உறவினர்கள் நண்பர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பி உள்ளார்.
அவர்கள் கணேசனை தொடர்பு கொண்டும் இவர் செல்போனை எடுக்கவில்லை என்பதும், சிறிது நேரத்திலேயே இறந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இறந்த கணேசன் உடல் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வடுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி