மன்னார்குடியில் தங்க சூரிய பிரபை வாகன உலா

74பார்த்தது
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 18 நாட்கள் நடைபெறும் விழாவில் நேற்று (மார்ச் 27) இரவு 10வது நாளாக தங்கள் சூரிய பிரபை வாகன வீதி உலா நடைபெற்றது.

யானை வாகன மண்டபத்தில் இருந்து வேணுகோபாலன் அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி கையில் புல்லாங்குழலுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவை காண திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடினர். கண்கவர் வானவேடிக்கைகளுடன் நடைபெற்ற விழாவில் பக்தர்கள் பல அடி நீளம் கொண்ட மலர் மாலைகளை சுவாமிக்கு சூட்டினார். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி