வெள்ளையனுக்கு மன்னார்குடியில் மௌன ஊர்வலம் அஞ்சலி

80பார்த்தது
வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவையொட்டி அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மன்னார்குடியில் நடைபெற்றது. மன்னார்குடி வர்த்தக சங்கம், வணிகர் சங்கம் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இதில் பங்கேற்றனர். முன்னதாக மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் இருந்து பந்தலடி காந்தி சாலை மேலராஜா வீதி வழியாக பெரியார் சிலை வரை மௌன ஊர்வலம் நடைபெற்றது. அதன் பின்னர் அலங்கரிக்கப்பட்ட வெள்ளையனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி