திருத்தணி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வசதிக்காக 20 லட்சம் மதிப்புடைய புதிய பேருந்தை நன்கொடையாக வழங்கிய பக்தர்
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்னை உட்பட பிற மாவட்டங்களில் இருந்து முருகன் மலைக்கோவிலுக்கு காவடி எடுத்தும் மாலை அணிவித்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற முருகப்பெருமானை தரிசனம் செய்து செல்கின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் மலை அடிவாரத்தில் உள்ள தணிகை குடியிலிருந்து பக்தர்கள் வசதிக்காக மலைக்கோவிலுக்கு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி மேலும் பக்தர்கள் வசதிக்காக முருகன் கோவிலுக்கு புதிய பேருந்து நன்கொடையாக வழங்கினார். இப்பேருந்தை கோவில் மாட வீதியில் பேருந்துக்கு மாலை அணிவித்து பூஜைகள் செய்து பின்னர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களிடம் பேருந்தின் சாவியை தொழிலதிபர் ராமமூர்த்தி வழங்கினார். பின்னர் மலை கோவிலில் இருந்து மலை அடிவாரத்தில் உள்ள தணிகை குடியில் வரை பக்தர்களை ஏற்றிச்செல்ல பேருந்து சேவை இயக்கப்பட்டது.