விநாயகர் கோவிலில் 108 சங்குகள் கொண்டு சங்காபிஷேகம்

55பார்த்தது
திருவள்ளூரில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில் 108 சங்குகள் கொண்டு சங்காபிஷேகம் யாகம் நடத்தி மண்டல அபிஷேகம் நிறைவு.

திருவள்ளூர் பெரும்பாக்கத்தில் நேதாஜி சாலையில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. அது நடைபெற்று 48 நாட்கள் கழித்து மண்டல பூஜை 108 சங்காபிஷேகம் வைத்து சிறப்பு வேள்வி யாகம் நடத்தி பூர்ணகதி செய்யப்பட்டது. இந்த நிகழ்வின்போது சித்தி புத்தி விநாயகருக்கு பால், பன்னீர், சந்தனம், ஸ்வர்ண அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும், 108 சங்குகளில் நாட்டின் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி