திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு
திமுக அரசை கண்டித்து இன்று கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்தது. கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு திருவள்ளூரில்
போராட்டம் நடத்த அனுமதி தர முடியாது என காவல்துறை கூறியதால், அதிமுகவினர் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் பகுதியில் 300கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.