மோடிக்கு தேர்தல் ஜுரம் வந்துள்ளது - ஆர்.எஸ். பாரதி

579பார்த்தது
பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வந்துள்ளார் இன்னும் 2 முறை தமிழ்நாட்டிற்கு வர இருப்பதாகவும் அந்த அளவுக்கு தேர்தல் பயம் ஏற்பட்டுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியின் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இந்தியா முழுவதும் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் பிரகாசமாக உள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மிகப்பெரிய வளர்ச்சி கூட்டணி ஆதரவு பெற்றிருப்பதால் அதைக் கண்டு மோடிக்கு ஜுரம் வந்துவிட்டது.

உத்திர பிரதேசத்தில் ராகுலும், அகிலேஷ் யதாவும்ஒன்றிணைந்து நடை பயணம் சென்றதால் இந்த முறை அம்மாநிலத்தில் நிச்சயம் 60 நாடாளுமன்ற தொகுதியை இந்தியா கூட்டணி கைப்பற்றும் என அவர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி