வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு

574பார்த்தது
மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூரில் பெண்கள் பங்கேற்ற இரு சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதனை திருவள்ளூர் ஆட்சியர் பிரபு சங்கர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் காமராஜர் சிலை, உழவர் சந்தை, பேருந்து நிலையம், ஈக்காடு வரை நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிப்போம், எனது வாக்கு எனது உரிமை, தவறாமல் வாக்களிப்பது நமது கடமை என்ற
பதாகைகளை ஏந்தி பொது பொதுமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும்
வகையில் ஊர்வலமாக சென்றனர்.

தொடர்புடைய செய்தி