முருகன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

83பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5- படை திருக்கோயில் ஆகும்.

இந்த திருக்கோயில் இன்று அதிக அளவு ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம், மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சாமி தரிசனம் செய்ய மலை கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்

மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதல் மலைக் கோவிலில் பக்தர்கள் பொது தரிசனம் மற்றும் 100 ரூபாய் கட்டண வழி தரிசனம் வழிகளில் இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்து செல்கின்றனர்

மேலும் அதிக அளவு பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தியும் மொட்டை அடித்தும் முருகப்பெருமானை வணங்கி செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி