திருத்தணி அருகே தம்பதியை தாக்கியவர் கைது

1076பார்த்தது
திருத்தணி அருகே தம்பதியை தாக்கியவர் கைது
திருத்தணி அடுத்த லட்சுமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம் (58). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ், (34) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று பொன்னுரங்கம், அவரது மனைவி சரோஜா வீட்டில் இருந்த போது தினேஷ் திடீரென வீட்டில் புகுந்து உருட்டை கட்டையால், தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பொன்னுரங்கம் கொடுத்த புகாரின் பேரில் கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து தினேஷ்யை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி