தண்ணீர் பந்தல் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

63பார்த்தது
தண்ணீர் பந்தல் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காரனோடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு பத்திரிக்கையாளர் நல சங்கம் மற்றும் கர்ஜனை பூக்கள் தமிழ் மாத இதழ் சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் 2024 அனைவரும் 100% வாக்கு செலுத்த வேண்டி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு பத்திரிக்கையாளர் நலச் சங்கத்தின் மாநில தலைவர் நமது நகரம் ஆசிரியர் சரவணன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கர்ஜனை பூக்கள் பத்திரிகையின் ஆசிரியர் மாநில செய்தி தொடர்பாளர் ஆர் லோகேஸ்வரராவ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை செங்குன்றம் காவல் சரக ஆணையர் ராஜா ராபர்ட் அவர்கள் பொதுமக்களுக்கு மோர் பழரசம் பல வகை பழங்கள் வழங்கி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். மேலும் நிகழ்ச்சியில் பீப்பிள் டுடே ஆசிரியர் மாநில பொதுச் செயலாளர் ஜி சத்யநாராயணன் மற்றும் சட்ட கேடயம் ஆசிரியர் மாநிலத் துணைத் தலைவர் டி. ராஜன் ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர். மாலை தீபம் நாளிதழின் ஆசிரியர் மாநில அமைப்பு செயலாளர் பி முகுந்தன் நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கினார். மேலும் சங்க நிர்வாகிகள் ரிப்போர்ட்டர் விஷன் பாலாஜி நமது நகரம் புகழேந்தி மற்றும் கர்ஜனை பூக்கள் பத்திரிகையின் நிருபர்கள் , சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி