மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனை ஆதாரித்து கமல்ஹாசன் நேற்று (ஏப்ரல் 3) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நான் அரசியலில் வருவதற்கு முன்பு சாதியம் என் எதிரி என்று கண்டுபிடித்தேன். ஆனால், என் படங்களில் சாதிப் பெயர் ஏன் வருகிறது என்று நீங்கள் நினைக்கலாம். குடியைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்றால், குடிகாரனை மையப்படுத்தி தான் எடுக்க வேண்டும். அதை போல தான் படங்களின் பெயர்களும் வைக்கப்படுகின்றன. எத்தனை பேர் அடிமையாக உள்ளனர் என்பதை கண்டுபிடிக்கவே சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கேட்கிறோம் என்று தெரிவித்தார்.