சரித்திர பதிவேடு குற்றவாளி லட்சுமணன் கொடூரமாக வெட்டிக்கொலை

573பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள சின்ன காவனம் பகுதியில் வசிக்கும் லட்சுமணன் வயது 26 தந்தையின் பெயர் மாணிக்கம்.
சரித்திர பதிவேடு குற்றவாளியான லட்சுமணன் மனைவிக்கும் சரித்திர பதிவேடு குற்றவாளியான விஷ்ணு என்பவனுக்கும் கள்ள காதல் இருந்துள்ளது. இதற்கிடையே இன்று லட்சுமணன் விஷ்ணு ஒன்றாக இணைந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது அருந்திவிட்டு தோட்டக்காடு அருகே உள்ள மேட்டு காலனி பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை அருகில் கோவில் அருகாமையில் உள்ள ஆலமரத்து அடியில் விஷ்ணுவும் லக்ஷ்மணனும் பேசிக் கொண்டிருந்த நிலையில் அடையாளம் தெரியாத விஷ்ணுவின் கூட்டாளிகள் நான்கு பேர் லட்சுமணனை பின் பக்கமாக தலையில் வெட்டியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் லட்சுமணன் துடிதுடித்து அங்கேயே இறந்துள்ளார். இதற்கிடையே இது தொடர்பாக மீஞ்சூர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் அங்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் நடந்த மேட்டு காலணி பகுதி விஷ்ணுவுக்கு சொந்தமான ஊர் என்று கூறப்படுகிறது. கள்ளக்காதல் தொடர்பாக கணவனை மனைவி ஆள் வைத்துக் கொலை செய்தாரா அல்லது விஷ்ணு தன் கள்ளக் காதலிக்காக கொலை செய்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி