கார்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்து

3304பார்த்தது
சென்னை அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் தனது மனைவியுடன் தனது காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுபாட்டை இழந்து தரிக்கெட்டு ஓடியதில் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எர்டிகா, மற்றும் மாருதி ஆல்டோ என இரு கார்கள் மீது மோதி பின் சைக்கிளில் வந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மீதும் மோதியது இதில் காரை ஓட்டி வந்த சந்திரனின் மனைவிக்கு கழுத்து மற்றும் வாயில் காயம் ஏற்பட்டது.

மேலும் சைக்கிளில் வந்தவருக்கு இடது கை தோல் பட்டை எலும்பு முறிந்த நிலையில் இருவரையும் ஆவடி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அம்பத்தூர் போக்குவரத்து போலிசார் தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அருகே தரிக்கெட்டு சாலையில் ஓடிய கார் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது சாலையில் மக்கள் அச்சமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி