வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

58பார்த்தது
வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வு நேற்று (ஏப்ரல் 23) காலை நடைபெற்றது. பச்சைப் பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி தங்கப் பல்லக்கில் வந்த கள்ளழகர், பக்தர்களுக்கு அருள் தந்தபடி வைகை ஆற்றில் இறங்கினார். இந்த விழாவுக்காக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் வைகை அணையில் இருந்து 216 மி.கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :