தெலங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஷா என்ற இளம்பெண். இவர் பி.காம் படித்த நிலையில் வேலையில்லா விரக்தியில் எருமை மாடு மேய்த்து வருகிறார். இவரது இன்ஸ்டா வீடியோ ஒன்று வைரலான நிலையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும், கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 5,754 வாக்குகள் பெற்று 4ஆவது இடத்தை பிடித்தார். இந்நிலையில் தற்போது நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.