ரயிலில் முன்பதிவு செய்யும் அனைவருக்கும் டிக்கெட் உறுதி

71பார்த்தது
ரயிலில் முன்பதிவு செய்யும் அனைவருக்கும் டிக்கெட் உறுதி
இந்தியாவில் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகிற ஜுன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளன. தொடர்ந்து, தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் பரபரப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரயிலில் முன்பதிவு செய்யும் அனைவருக்கும் டிக்கெட் உறுதி செய்யப்படும்” என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி