மகன் காதல் திருமணம் - தந்தைக்கு சரமாரி அடி உதை

80பார்த்தது
மகன் காதல் திருமணம் - தந்தைக்கு சரமாரி அடி உதை
கன்னியாகுமரி: மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மரியம் புறந்து விளையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (55). இவரது இளைய மகன் சென்னை ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் இளம்பிலாம் தோட்டாம் பாரை பாபு (53) என்பவரது மகளை காதலித்து திருமணம் செய்துள்ளார். இது பாபுவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று விஜயகுமார் அப்பகுதியில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது பாபு இரும்பு ராடால் விஜயகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் விஜயகுமாரின் கை, தோள்பட்டை, முதுகு ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

விஜயகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழுத்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி