சாலை விபத்த்தில் வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் - ஒருவர் பலி

2257பார்த்தது
மணலி விரைவு சாலையில் இரண்டு வாகனங்கள் மோதி நடுவில் சிக்கிக்கொண்ட இருசக்கர வாகன ஓட்டி தீயில் கருகி உயிரிழந்தார்.

சென்னை மணலி விரைவு சாலை சாத்தாங்காடு காவல் நிலையம் அருகே சிபிசிஎல் நிறுவனத்தின் ஆர் என் டி நுழைவு வாயில் அருகே சுற்றுலா வாகனத்தில் குடிபோதையில் ஓட்டி வந்த ஓட்டுநர் இருசக்கர வாகன ஓட்டி வந்தவர் மீது மோதிய சமையாம் அதே போன்று எதிர் திசையில் வந்த சரக்கு வாகனத்தில் மோதிய போது இரண்டு வாகனங்களின் இடையே சிக்கிக் கொண்ட நிலையில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து இரு சக்கர வாகன ஓட்டி வந்தவர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தார்.

சுற்றுலா வாகனமும் சாலை நடுவே தீப்பிடித்து எரிந்தது. இதனை அடுத்து சிபிசிஎல் ஆர் என் டி நுழைவு வாயிலில் இருந்து வந்த தீயணைப்பு வாகனம் மற்றும் மணலி தீயணைப்பு வாகனம் உடனடியாக வந்து தீயை அணைத்தனர் இருப்பினும் இருசக்கர வாகன ஓட்டியும் சுற்றுலா வாகனமும் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது

சாத்தாங்காடு போலீசார் சுற்றுலா வாகன ஓட்டியை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்து உயிரிழந்தவர் ஆண்டார் குப்பத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சுந்தர்ராஜன் (28) என தெரியவந்தது உயிரிழந்தவரின் உடலை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி