சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை.. தமிழக அரசு பதில்

65பார்த்தது
சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை.. தமிழக அரசு பதில்
சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசு சாபிர்ல் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய பல மாநிலங்களிடம் தகவல்கள் கோரப்பட்டன. சில மாநிலங்கள் பதிலளித்துள்ளன. சில மாநிலங்கள் பதிலளிக்கவில்லை. முழுமையான தகவல் கிடைத்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி