திருச்செங்கோடு சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் கோகிலவாணி(25). இவரது மகள் இதழிகா(3). கணவர் சசிதரன் ஓராண்டுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். தாயுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக, வீட்டை விட்டு வெளியேறி தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். 2 நாட்கள் ஆகியும் கதவு திறக்கப்படாததால் அறையை உடைத்துப் பார்த்தபோது அங்கு மின்விசிறியில் சடலமாக கோகிலவாணியும், படுக்கையில் குழந்தையும் இறந்து கிடந்தனர். கணவர் இறப்பு, தாயுடன் சண்டை ஆகிய காரணங்களால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.