கணவர் இறப்பு: குழந்தையைக் கொன்று உயிரை மாய்த்த பெண்

63பார்த்தது
கணவர் இறப்பு: குழந்தையைக் கொன்று உயிரை மாய்த்த பெண்
திருச்செங்கோடு சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் கோகிலவாணி(25). இவரது மகள் இதழிகா(3). கணவர் சசிதரன் ஓராண்டுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். தாயுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக, வீட்டை விட்டு வெளியேறி தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். 2 நாட்கள் ஆகியும் கதவு திறக்கப்படாததால் அறையை உடைத்துப் பார்த்தபோது அங்கு மின்விசிறியில் சடலமாக கோகிலவாணியும், படுக்கையில் குழந்தையும் இறந்து கிடந்தனர். கணவர் இறப்பு, தாயுடன் சண்டை ஆகிய காரணங்களால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி