மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ்

539பார்த்தது
செங்குன்றம் அருகே வண்டலூர்- மீஞ்சூர் 400 அடி வெளிவட்டச் சாலையில் ஜூன்15 ஆம் தேதி இரவில் 8 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சேர்ந்து ஆட்டோ ரேஸ் நடத்தியுள்ளனர். மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையில் ஆட்டோ ரேஸ் நடத்தியது வாகனஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

ஆட்டோ ரேஸ் செங்குன்றம் அருகே வந்தப்போது ஆட்டோக்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளனாது. அதுமட்டுமல்லாது சில ஆட்டோக்கள் சாலையில் வந்த 3 இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குன்றத்தூரைச் சேர்ந்த மணி, அம்பத்தூரை சேர்ந்த சாம் சுந்தர் ஆகியோர் உயிர் இழந்தனர். அதேபோல் மோகன கிருஷ்ணன் (30), மாரிமுத்து (32), ஜெபேயர் (20) ஆகிய மூன்று பேர் காயமடைந்தனர்.

ஆட்டோ ரேஸ் குறித்து காட்சி தற்போது வெளியான நிலையில் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ ரேஸ் குறித்து வெளியான வீடியோவில் 8 ஆட்டோக்கள் சாலையில் சீறி பாய்வதும் அதற்கு பாதுகாப்பாக 20 மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், 2 கார்கள் செல்வதும் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி