கொசஸ்தலை ஆற்றில் மண் அள்ளிய போது கைது

63பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த திருக்கண்டலம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் அருகே சட்டவிரோதமாக ஜேசிபி இயந்திரம் மூலம் லாரிகளில் மண் அள்ளுவதாக பெரியபாளையம் போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடி சென்றனர். மேலும் சட்டவிரோதமாக மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய 3 லாரிகள், 2 ஜேசிபி இயந்திரம், மற்றும் லாரி ஓட்டுனரான வானியன்சத்திரம் பகுதி சேர்ந்த கமலநாதன் (45) என்பவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் குற்றவாளியை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஏழு பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி