வாலிபர் கொலை வழக்கில் அதிரடி கைது

81பார்த்தது
வாலிபர் கொலை வழக்கில் அதிரடி கைது
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள மீனவ கிராமமான கூத்தன்குழியை சேர்ந்தவர் அஜித் (32). இவரை முன் விரோதம் காரணமாக நேற்று முன்தினம் ரகுமான் மற்றும் உறவினர்கள் கத்தியால் குத்தி கொலை செய்தனர். இது குறித்து கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நேற்று ரகுமானின் உறவினர்களான சர்லின் (42), பிராங்க்ளின் (50), ராஜூ (18), சௌமியா (29), பிரகாசி (35) ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். மேலும் ரகுமான் உட்பட ஏழு பேரை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி