நெல்லை மாநகரப் பகுதியில் கடந்த சிலதனங்களாக தொடர் மழை பெய்தது. குறிப்பாக நேற்று மாநகரின் பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டியது. இதற்கிடையில் மழை காரணமாக ஆங்காங்கே கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதே சமயம் பொதுமக்கள் அலட்சியத்தோடு கால்வாயில் கொட்டிய குப்பைகளால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதை எடுத்து மாநகராட்சி பணியாளர்கள் கால்வாயில் தேங்கிய குப்பைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர்.