நெல்லையில் ரயில் மூன்று மாதத்திற்கு நீட்டிப்பு

68பார்த்தது
நெல்லையில் ரயில் மூன்று மாதத்திற்கு நீட்டிப்பு
நெல்லை - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து இரவு 06. 45 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06070) வருகின்ற செப்டம்பர் 12, 19, 26, அக்டோபர் 3, 10, 17, 24, 31, நவம்பர் 7, 14, 21, 28 ஆகிய வியாழக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 08. 30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இதற்கு முன்பதிவு நடைபெறுகிறது. இவ்வாறு ரயில் சேவை மூன்று மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி