59வது நிகழ்ச்சி கொண்டாட்டத்தில் அதிமுகவினர்

81பார்த்தது
அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா ஏற்பாட்டில் 70 நிகழ்ச்சிகள் நெல்லையில் நடைபெற்று வருகின்றது. இதில் 59வது நிகழ்ச்சியாக இன்று சமாதானபுரம் மிலிட்டரி லைன் ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுனர் வெங்கடாஜலபதிக்கு விபத்து மற்றும் மருத்துவ காப்பீடு அட்டையினை பாப்புலர் முத்தையா வழங்கினார். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பாலமுருகன், சேக் மன்சூர், அப்துல் சமத், முனீஸ்வரன் உள்ளிட்ட அதிமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி