ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் துறை ரீதியான ஆய்வுப் பணிக்காக இன்று நெல்லை வந்தார். இங்கு நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி, 12- ம் வகுப்பில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விடுதி மற்றும் பள்ளியில் அடிப்படை வசதிகள், கட்டிடங்கள், மாணவர்கள் தங்கும் அறை ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 100 சதவீத தேர்ச்சிக்கு காரணமாக இருந்த ஆசிரியர்களை அமைச்சர் பாராட்டி கவுரவித்தார்.