சாலையை சீரமைக்க கோரி ஊர் மக்கள் ஆட்சியரிடம் முறையிட்டனர்

57பார்த்தது
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே திருப்புடைமருதூர் கிராமத்தில் சாலை கண்டும் குழியுமாக இருப்பதால் அதை சீரமைக்க கோரியும் தெருக்களில் தெருவிளக்கு உள்பட அடிப்படை வசதிகள் இல்லாததால் தெருக்களை சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் இன்று நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி