நெல்லையை அடுத்த தெற்கு மூன்றடைப்பு கீழ தெருவை சேர்ந்த தொழிலாளி சக்திவேல் நேற்று நள்ளிரவில் வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது தவறி விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் நள்ளிரவு சக்திவேல் பரிதாபமாக இறந்தார். போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.