மோசமான சாலையால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்

57பார்த்தது
மோசமான சாலையால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்
நெல்லை மேலப்பாளையம் பகுதியில் பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. புதிதாக சாலை போடும் பணி மந்தமாக நடைபெறுவதால் கற்கள் சிதறி கிடக்கிறது. குறிப்பாக நத்தம் ரோடு முழுவதும் கற்கள் சிதறி கிடப்பதால் இந்த வழியாக செல்லவே வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மேலப்பாளையம் பகுதி மக்கள் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி