நகைகளை திருடிவிட்டு கடிதம் எழுதி வைத்துச் சென்ற திருடன்

68பார்த்தது
நகைகளை திருடிவிட்டு கடிதம் எழுதி வைத்துச் சென்ற திருடன்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சித்திரை செல்வின் என்பவர் தனது மனைவியுடன் கடந்த 17ஆம் தேதி சென்னை சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று (ஜூலை 2) வீட்டை சுத்தம் செய்ய வந்த செல்வி என்பவர் வீட்டின் கதவுகள் உடைந்திருப்பதைப் பார்த்து போலீசாருக்கும், சித்திரை செல்வினுக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பீரோவில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் பணம், தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

தொடர்ந்து, திருடன் எழுதிய கடிதம் ஒன்று கண்டறியப்பட்டது. அதில், “என்னை மன்னித்து விடுங்கள். நான் இன்னும் ஒரு மாதத்தில் திருப்பி தந்து விடுகிறேன். என் வீட்டில் உடம்பு சரியில்லை, அதனால்தான்” என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி