தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக இன்று பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் பெயரில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.