சோழவந்தான் - Cholavanthaan

மிளகாய் பொடி தூவி கொத்தனார் வெட்டிக் கொலை

மிளகாய் பொடி தூவி கொத்தனார் வெட்டிக் கொலை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் பகுதியை சேர்ந்த மனோகரனின் மகன் சதீஷ் (32. ) கட்டிட தொழிலாளியாக உள்ளார். இவர் நேற்றிரவு (அக். 3) செக்கானுாரணியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்த போது மேலக்கால் கணவாய் அருகே வேனில் வந்த ஒரு கும்பல் வழிமறித்து மிளகாய் பொடி துாவி ஆயுதங்களால் சதீஷை தாக்கி தப்பி விட்டது. இதில் படுகாயமடைந்த சதீஷ்குமார் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சொத்து தகராறு காரணமாக கொலை நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சோழவந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை குற்றவாளிகளை தீவிரமாக விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా