சோழவந்தான் - Cholavanthaan

சோழவந்தான்: மருத்துவ முகாம்; பொதுமக்களுக்கு பரிசோதனை

சோழவந்தான்: மருத்துவ முகாம்; பொதுமக்களுக்கு பரிசோதனை

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள காமராஜர் நடுநிலைப் பள்ளியில் பிரிட்டானியா நியூட்ரிஷன் பவுண்டேஷன் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை பேரூராட்சி தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பேரூராட்சி கவுன்சிலர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி கவுன்சிலர்கள் மாணவரணி எஸ் ஆர் சரவணன் மற்றும் பிரிட்டானியா நியூட்ரிஷன் பவுண்டே ஷன் மாவட்ட திட்ட இயக்குனர் ரஞ்சிதா களப்பணியாளர்கள் ஆனந்த், பானுப்பிரியா தேவி பிரியா, ஜாகின் வாஞ்சிநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண்பார்வை குறைபாடு, காது, மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மதுரை ஆர். ஆர். மருத்துவமனை ஐ பவுண்டேஷன் மருத்துவமனை அரிஸ்டோ மருத்துவமனை ஆகியவற்றில் இருந்து மருத்துவ பணியாளர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனைகள் செய்து ஆலோசனைகள் வழங்கினார்கள்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా