போடியில் தேங்காய் விலை உயர்வு

70பார்த்தது
போடியில் தேங்காய் விலை உயர்வு
போடிநாயக்கனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 6, 000 ஏக்கருக்கும் மேல் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த 20 நாள்களுக்கு முன்பு வரை விவசாயிகளிடம் இருந்து மட்டை உரிக்கப்பட்ட தேங்காய் டன் ஒன்று ரூ. 23, 000 முதல் ரூ. 24, 000 வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது விழாக் காலம் தொடங்குவதாலும் தேங்காய் வரத்து குறைந்திருப்பதாலும், டன் ஒன்று ரூ. 28, 000 முதல் ரூ. 29, 000 வரை விலை உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி